பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்க
இன்றைய இளம்பெண்களின் மிகப்பெரிய பிரச்னை பி.சி.ஓ.எஸ். எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி.
பத்தில் ஒரு பெண், தங்களின் 20 - 30 வயதுக்குள் இந்த பி.சி.ஓ.எஸ். பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது.
பி.சி.ஓ.எஸ். என்றால், கருப்பையின் சுவர்கள் போல இருக்கும் சினைப்பைகளில் சிறிது சிறிதாக பல நீர்க்கட்டிகள் உருவாவது.
இப்படி அதிக நீர்க்கட்டி உருவாகும்போது, அப்பெண்ணுக்கு கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மாதவிடாய் சுழற்சி முதல் கருத்தரித்தல் வரை பல பிரச்னைகள் ஏற்படும்.
இதனை ஒரு சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.
- இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.
- உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.
- டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.
- மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.