”தை பிறந்தால் வழி பிறக்கும்” பொங்கல் தினத்தில் இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய தினத்தில் 12 ராசிகளுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
உங்கள் மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள், மற்றவர்களின் எண்ணங்கை புரிந்து கொள்வீர்கள், வீ்ட்டில் மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
மனதளவில் மாற்றங்கள் ஏற்பட்டு எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் செய்வீர்கள், உயர்கல்வி தொடர்பில் நிச்சயம் விடை கிடைக்கும். பொறுமை காக்கவும்.
மிதுனம்
தொழில்ரீதியாக முன்னேற்றம் ஏற்படும், உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் குறைந்து புரிதல் உண்டாகும்.
கடகம்
கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள், பொறுமையாக இருந்து நினைத்தை நிறைவேற்றவும், மனதளவில் மாற்றங்கள் உண்டாகலாம்.
சிம்மம்
வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம், கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும், ஆரோக்கியம் மேம்படும், எதிர்பார்த்த பொருட்கள் கிடைக்கும்.
கன்னி
பண வரவும், மனை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகும், ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும், தொழில்ரீதியாக விட்டுக்கொடுத்து செல்லவும்.
துலாம்
உங்கள் சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு உண்டு, தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும்.
விருச்சிகம்
பொறுமையை கையாளவும், உறவுகளின் ஒத்துழைப்பு மேம்படும், கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப்பெறும்.
தனுசு
வெகுநாட்களால் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மகரம்
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், தொழில் ரீதியாக திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம்
உங்களது செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும், உயர் அதிகாரிகளிடம் இணக்கமாக செல்வீர்கள், நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம்.
மீனம்
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், நிதானமான பேச்சு நம்பிக்கையை உண்டாக்கும், இதன் மூலம் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டு.