வீடே மணமணக்கும் சுவையான மல்லி பொங்கல்.., எப்படி செய்வது?
காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு வெண் பொங்கல்.
அந்தவகையில், வீடே மணமணக்கும் சுவையான மல்லி பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பாசிபருப்பு- ¼ கப்
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- பச்சைமிளகாய்- 2
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- முந்திரி- 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து 2 முறை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் தண்ணீர், உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கலந்து மூடி விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான மல்லி பொங்கல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |