போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்
Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் நபர் கைது
பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.

மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.
இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |