சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு பயணிகளுக்கு பச்சை கொடி: பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் வெளிநாட்டு பயணிகளுக்கு பச்சை கொடி காட்டியுள்ளது.
மே 17ம் திகதி முதல் குறைந்த தொற்று விகிதமுடைய பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என போர்ச்சுகல் அறிவித்துள்ளது.
பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை மே 17 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று போர்ச்சுகல் சுற்றுலா ஆணையம் தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், நாட்டின் உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பயணிகள் வந்தவுடன் கொரோனா தொற்று இல்லை என்ற சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என போர்ச்சுகல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100,000 பேருக்கு 500 என்ற தொற்று விகிதம் உள்ள நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் போர்ச்சுகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
Liechtenstein, நோர்வே, ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து வரும் பயணிகளும் திங்கள்கிழமை முதல் போர்ச்சுகலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற பரிசோதனை முடிவு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.