பிரபல ஐரோப்பிய நாட்டில் Work From Home தொழிலாளர்களுக்காக புதிய சட்டம் அறிமுகம்!
போர்ச்சுகலில் Work From Home தொழிலாளர்களுக்கான புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இந்த கோவிட் காலக்கட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது பயண நேரத்தைச் சேமிக்க உதவியது. ஆனால், அதேசமயம் தொழிலாளர்களுக்கு வேலை நேரம் நீட்டிக்கப்படுவதும், அலுவலக நேரத்திற்குப் பிறகு முதலாளிகளிடமிருந்து அழைப்புகள் வருவதும், அதனால் அதிக சோர்வை ஏற்படுத்தியது. இதனால், வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறைந்து வருகிறது.
இதை முறியடிக்க, போர்ச்சுகல் முதலாளிகள் தங்கள் ஊழியர்களை அவர்களின் அலுவலக நேரத்திற்கு பிறகு அழைப்பதை சட்டவிரோதமாக்கியுள்ளது.
முதன்முறையாக, போர்ச்சுகல் அரசாங்கம் டிஜிட்டல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டங்களை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
எந்தவொரு முதலாளியும் அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை அழைத்தால், நிறுவனம் பண அபராதம் செலுத்த வேண்டும் என்று முக்கிய சட்டங்களில் ஒன்று கூறுகிறது.
ஒரு ஊழியர் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது மின்சாரம் மற்றும் வைஃபை கட்டணங்கள் போன்ற செலவுகளுக்கு நிறுவனங்களைச் செலுத்துமாறு சட்டங்கள் வலியுறுத்தியுள்ளன.
Photo: Getty Images
சில சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும், 'இணைப்பைத் துண்டிக்கும் உரிமை' போன்ற சில சட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தன. பணி நேரத்திற்குப் பிறகு அனைத்து பணி சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை அணைக்கும் உரிமை போன்ற சட்டங்கள் சட்டமியற்றுபவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் பலன்கள் இருந்தாலும், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க ஊழியர்களுக்கு உதவும் முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த புதிய விதிகள் உலகெங்கிலும் அதிகரித்து வரும் பணியிலிருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரத்தின் நேரடியான பிரதிபலிப்பாகும்.
இது மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை போர்ச்சுகல் நாட்டில் வேலை தேடுவதற்கு ஈர்க்கும் என்றும் போர்ச்சுகல் அரசு நம்புகிறது, குறிப்பாக தொற்றுநோய்களின் போதும் இது ஈர்க்கப்பட வேண்டும் என நினைக்கிறது.
"இந்த டிஜிட்டல் நாடோடிகள் மற்றும் தொலைதூரத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக போர்ச்சுகலை நாங்கள் கருதுகிறோம், நாங்கள் அவர்களை போர்ச்சுகலுக்கு ஈர்க்க விரும்புகிறோம்" என்று லிஸ்பனில் இணைய உச்சி மாநாட்டில், போர்ச்சுகலின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் Ana Mendes Godinho கூறினார்.