பிரித்தானியர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதியா.. இல்லையா? பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு: நீடித்த குழப்பத்திற்கு தீர்வு!
பிரித்தானியா சுற்றுலா பயணிகளுக்கு பிரபல ஐரோப்பியான நாடான போர்ச்சுகல் அனுமதி அளிக்குமா என குழப்பம் நீடித்து வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.
திங்கட்கிழமை முதல் அதாவது மே 17ம் திகதி முதல் பிரித்தானியர்கள் போர்ச்சுகலுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா என தனக்கு தெரியவில்லை என போர்ச்சுகலின் Algarve எம்.பி கருத்து தெரிவித்ததை அடுத்து குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மே 17ம் திகதி முதல் பிரித்தானியா சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என போர்ச்சுகல் அறிவித்துள்ளது.
நாட்டிற்கு பயணிக்க திட்டமிடும் எந்தவொரு பயணியும் புறப்படும் திகதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று போர்ச்சுகல் தேசிய சுற்றுலா அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் போர்ச்சுகலுக்கு வருகை தந்து எங்கள் கலாச்சாரம், மரபுகள், அடையாளங்கள், வரலாறு ஆகியவற்றைக் கொண்டாடினார்கள், பல தசாப்தங்களாக எங்கள் அன்பான விருந்தோம்பலை அனுபவித்துள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் வரவேற்க நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் அAugusto Santos Silva தெரிவித்துள்ளார்.