ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 120 பேர் உயிரிழப்பு!
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஹெராத் நகருக்கு மேற்கே 40 கிமீ தொலைவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்
நேற்று காலை 11 மணியளவில் ஆப்கானிஸ்தானில் கடுமையா நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது அண்டை நாடுகளான பட்கிஸ் மற்றும் ஃபரா மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
இந்த நடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்.
மேலும் சிலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் தேடுதல் பணி தொடர்வதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உள்ளூர் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
At least 100 people were killed and a further 500 injured in today’s 6.3 magnitude #earthquake in Herat Province. Read more here about ongoing humanitarian response efforts in our latest Flash Update:?https://t.co/bPOPyh75WO
— OCHA Afghanistan (@OCHAAfg) October 7, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |