மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்
வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிகோ நகரத்திற்கு தெற்கே 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:47 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.