இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியா கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம். 6.1 ரிச்டர்அளவிலான பதிவாகியுள்ளதையடுத்து சுனாமி அச்சமும் எழுந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 6 மைல் ஆழத்திலும், மாலுகு மாகாணத்தின் செராம் தீவில் உள்ள அமஹாய் நகரத்திலிருந்து 43 மைல் தொலைவிலும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி மாலுகு தீவுகள் என்று அழைக்கப்படும் மொலுக்காஸ் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கடற்கரையை அண்மித்து வசிப்பவர்களை உயர்ந்த இடங்களுக்கு செல்லுமாறு இந்தோனேஷியாவின் புவி இயற்பியல் நிறுவனம் பணித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
இருப்பினும் சில கட்டிடங்கள் மற்றும் பொது நிலையங்கள் சேதமடைந்ததாகவும் இந்தோனேஷிய பேரழிவு தணிப்பு முகமை அதிகாரி ஒருவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.