சுடுகாட்டில் சடலமாக மணமகன்: சர்ச்சையை கிளப்பிய Pre Wedding போட்டோஷூட்
தாய்லாந்தில் மிகவும் வித்தியாசமாக தம்பதியினர் ஒருவர் நடத்திய Pre Wedding போட்டோஷூட்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சமீபகாலமாகவே Pre Wedding போட்டோஷூட்கள் அதிகரித்து வரும் சூழலில், வித்தியாசமாக எடுக்கப்படும் புகைப்படங்கள் எதிர்ப்புகளை சந்திக்கிறது.
அந்தவகையில் தாய்லாந்தில் கல்லறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட Pre Wedding போட்டோஷூட்களுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
அதாவது கல்லறைகள், பேய்கள், இறுதிச்சடங்குகளை மையப்படுத்தி புகைப்படங்களை எடுத்துள்ளார் Nonts Kongchaw, மணமகனும் அவரே தான்.
பெரும்பாலான தனது புகைப்படங்களை சவப்பெட்டி மற்றும் சடலங்களை மாடலாக வைத்து எடுத்துள்ளார்.
ஒரு புகைப்படத்தில் துணி சுற்றப்பட்ட சடலத்தை வைத்தது போன்ற கேக்குடன் போஸ் கொடுத்துள்ளார் Nonts.
மற்றொரு புகைப்படத்தில் சடலத்தின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார், இது நிஜமாகவே திருமணத்திற்காக எடுக்கப்பட்டதா? அல்லது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதா? என்பதும் தெளிவாக தெரியவில்லை.
எது எப்படியாயினும் இந்த புகைப்படங்கள் விமர்சனங்களை பெற்றாலும், வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.