உக்ரைனில் ரஷ்யாவின் அடுத்த நகர்வு இதுதான்: இரகசியம் உடைக்கும் இராணுவ நிபுணர்
கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ரஷ்யா அடுத்து உக்ரைனில் என்ன நடவடிக்கையை முன்னெடுக்கும்
இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ எந்த தீர்க்கமான இராணுவ வெற்றியையும் அடைய வாய்ப்பில்லை
ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ இந்த ஆண்டு உக்ரைனில் எந்த தீர்க்கமான இராணுவ நடவடிக்கையையும் அடைய வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார் பிரித்தானியாவின் முக்கிய இராணுவ உணவுத்துறை அதிகாரி ஒருவர்.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், இராணுவ ரீதியாக கடும் பின்னடைவை எதிர்கொண்டதுடன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.
@SOPA
மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என சூளுரைத்து கிளம்பிய ரஷ்ய படைகள், 150 நாட்கள் கடந்தும் உக்ரைன் படைகளுடன் போரிட்டு வருகிறது. மட்டுமின்றி, முக்கிய இராணுவ தலைவர்கள் பலரையும் ரஷ்யா இழந்துள்ளது.
இந்த நிலையில், கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் ரஷ்யா அடுத்து உக்ரைனில் என்ன நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பது தொடர்பில் பிரித்தானிய இராணுவ உளவுத்துறை தலைவர் Gen Hockenhull வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், தற்போது கடும் நெருக்கடியை ரஷ்யா எதிர்கொண்டு வந்தாலும், மேலும் படைகளை திரட்டி, உக்ரைனில் களமிறக்கவே முயற்சிக்கும் என்றார். மேலும் டான்பாஸ் பகுதியில் முகாமிட்டுள்ள படைகளில் கொஞ்சம் தெற்கு பகுதிக்கு மாற்றப்படலாம் எனவும், உக்ரேனிய படைகளின் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள ரஷ்யா இப்பகுதியில் திணறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@NUR
மட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ எந்த தீர்க்கமான இராணுவ வெற்றியையும் அடைய வாய்ப்பில்லை எனவும், இது நெடுங்காலம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொறுமை இழக்கும் விளாடிமிர் புடின் அணு ஆயுத பயன்பாட்டால் போரை முடிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,
உடனடியாக பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை எனவும், ஆனால் யுத்தத்தின் போக்கு மாறும் என்றால் புடின் அணு ஆயுதம் பயன்படுத்தவும் தயங்கமாட்டார் என Gen Hockenhull குறிப்பிட்டுள்ளார்.