தமிழ்நாடு தேர்தலில் வெற்றி யாருக்கு? Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என கோடிகளில் பந்தயம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தேர்தல் களம் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் என சூடுபிடித்துள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் எனஅரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
திமுக தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது முதல்முறையாக பாஜகவை கூட்டணியில் வைத்து வெற்றி பெற்ற பெருமையை அதிமுக பெறுமா? அல்லது முதல் தேர்தலில் வெற்றி பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தவெக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக வாக்காளர்களிடையே உள்ளது.
இது தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகளவிலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளை சிலர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனை வைத்து Polymarket தளத்தில் கோடிகளில் பெட்டிங் நடைபெறுகிறது.
Polymarket
Polymarket என்பது அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் Prediction Market ஆகும். இது USDC என்னும் ஸ்டேபிள் காயின் எனப்படும் க்ரிப்டோ காயின் மூலம் இயங்குகிறது.
வர்த்தகர்கள் இந்த தளத்தில், அமெரிக்கா ஈரானை தாக்குமா, வெனிசுலாவை தாக்குமா, ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டுவார்கள்.
அதே போல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வைத்தும் இந்த பந்தயம் நடைபெறுகிறது. இதில், தற்போது திமுக கூட்டணி 78% உடன் முன்னணியில் உள்ளது. அதிமுக 15 சதவீதத்துடன் 2வது இடத்திலும், விஜய்யின் தவெக 7 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளது.

இது வாக்காளர்களின் மனநிலையையே அல்லது கூட்டணி கணக்கு, சாதி சமன்பாடுகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதில்லை . மாறாக தலைப்பு செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களின் விவாதங்களை பொறுத்து மாறுகிறது.
விஜய்யின் விவகாரத்து சர்ச்சை வந்த பின்னர் தவெகவின் சதவீதம் சரிவடைந்தது.
இதில், தமிழ்நாடு தேர்தலில் போட்டியிடாத திரிணாமுல் காங்கிரஸ் பெயர் கூட பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளுடன் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் பெயர் பட்டியலிடப்படவில்லை.
சந்தையில் தற்போது வரை சுமார் 1,67,000 டொலர் (சுமார் ரூ. 1.57 கோடி) வர்த்தக அளவு பதிவாகியுள்ளது. இன்னும் 23 நாட்களில் இது பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுறது.
இந்தியாவில் இது போன்ற பந்தயங்கள் கடந்த ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக பாஜக 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுமா, தவெக இரட்டை இழக்க வாக்கு வீதம் பெறுமா என்கிற ரீதியில் பந்தயங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |