இளவயது கர்ப்பிணி... ஒற்றைக் காரணம்: கணவரின் வெறிச்செயலால் உயிருக்கு போராட்டம்
பொருளாதார நிலை கருதி, கருக்கலைப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு கணவர் தொடர்ந்து வாக்குவாதம்
ஹனா உயிர் தப்புவது கடினம், கணவன் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில், குழந்தை இறந்துள்ளது
லெபனான் நாட்டில் கருக்கலைப்புக்கு மறுத்த ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை, கணவன் எரிவாயு பயன்படுத்தி உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானின் திரிபோலியில் குறித்த 21 வயதேயான பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
கரு இறந்த நிலையில் அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும், அந்த இளம் தாயார் உயிர் பிழைப்பதது கடினம் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலை கருதி, கருக்கலைப்புக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஹனா முகமது கோடரிடம் அவரது கணவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், முதல்முறை தாயாவதால் கருவை கலைக்க ஒப்புக்கொள்ள முடியாது என ஹனா முகமது கோடர் திட்டவட்டமாக கூறி வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஆத்திரத்தில் அந்த கணவன் எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி மனைவியை நெருப்பு வைத்துள்ளார். ஆக்ஸ்டு மாதம் 6ம் திகதி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஹனா முகமது கோடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து மாத கர்ப்பிணியான ஹனா உயிர் தப்புவது கடினம் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கணவன் கொடூரமாக தாக்கியுள்ள நிலையில், குழந்தை இறந்துள்ளதாகவும், அறுவை சிகிச்சையால் அகற்றியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஏழை குடும்பம் என்பதால் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஆனாலும் நாளுக்கு 400 டொலர் அளவுக்கு செலவு இருப்பதாகவும் ஹனாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேற முயன்ற ஹனாவின் கணவரை லெபனான் உள்ளூர் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.