கர்ப்பிணிப்பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்: காத்திருந்த அதிர்ச்சி
கொலம்பியா நாட்டில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
சோதனையில், அவர் கர்ப்பிணியே அல்ல என்பது தெரியவந்ததுடன், அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
கர்ப்பிணிப்பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கொலம்பியா நாட்டில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணியை பொலிசார் சோதனையிட்டார்கள்.
அப்போது, அவர் தன் வயிற்றில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போலி வயிறு போன்ற அமைப்பு ஒன்றை ஒட்டவைத்திருந்தது தெரியவந்தது.
அந்த போலி வயிற்றுக்குள் அவர் ஏராளம் கொக்கைன் என்னும் போதைப்பொருட்களை மறைத்துவைத்திருந்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பொதுவாக கர்ப்பிணிகளைப் பார்த்தால் அவர்கள் மீது அக்கறையும் பரிதாபமும் ஏற்படும். ஆனால், கர்ப்பமுற்றிருப்பதாக ஏமாற்றி, அதையே போதைப்பொருள் கடத்துவதற்காக பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்துவருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |