கர்ப்பிணிப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த முதலை: பின்னர் நடந்த பயங்கரம்
இந்தோனேசியாவில், கர்ப்பிணிப்பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த முதலை ஒன்று அவரை கடித்து இழுத்துச் சென்றது.
கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்
மே மாதம் 27ஆம் திகதி, எட்டு மாத கர்ப்பிணியான முனீரா, தாய்லாந்தில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவரது வீட்டுக்குள் ஒரு பெரிய முதலை நுழைந்துள்ளது.
முனீராவின் வீடு, கட்டைகள் அல்லது தூண்களை தண்ணீருக்குள் இறக்கி, அதன் மீது கட்டப்படும் stilt home என அழைக்கப்படும் வகையிலான வீடாகும்.
சமீபத்தில், முனீராவின் வீட்டின் அருகிலுள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அதன் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்திருக்கிறது.
அதைத் தொடர்ந்துதான் அந்த முதலை ஊருக்குள் வந்திருக்கிறது.
முதலை முனீராவின் காலைக் கவ்விப்பிடிக்க, அவர் அலறி சத்தமிட்டுள்ளார்.
அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஓடிவந்து அந்த முதலையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
ஆனாலும், அந்த முதலை முனீராவை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டிருக்கிறது.
சுமார் அரை மணி நேரத்துக்குப் பின், முனீராவின் உயிரற்ற உடல் கரையொதுங்கியுள்ளது.
எட்டு மாத கர்ப்பிணியான முனீராவின் மரணம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |