இது முட்டாள்தனமானது! பிரித்தானியா அரசாங்கத்தின் திட்டம் குறித்து WHO எச்சரிக்கை
பிரித்தானியாவில் பிளான் பி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிடுவது முட்டதனமானது என உலக சுாகதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவுக்கான WHO-வின் சிறப்பு தூதர் டாக்டர் David Nabarro கூறியதாவது, குறிபிட்ட நாட்களுக்குள் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துவிடும் என முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்காமல் இருப்பது முக்கியம்.
கட்டுப்பாடுகள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் அவை மக்கள் தொடர்புகளை குறைக்கின்றன, எனவே கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டுப்பாடுகள் முடிவடையும் அல்லது இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று முன்கூட்டியே உறுதியளிக்காமல் இருப்பது முக்கியம்.
நான் ஒரு பொது சுகாதார துறையை சேர்ந்த நபர், எதிர்காலத்தில் நான் உத்தவாதம் அளிக்க மாட்டேன்.
ஏனென்றால், உத்தரவாதம் அளித்தால், ஏற்கனவே நாம் செய்ய திட்டமிட்டிருக்கும் செயல்களை மாற்றுவது மிகவும் கடினம்.
இந்த வைரஸ் தொடர்ந்து உருவாகி வருகிறது, அது எப்படி இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம்.
ஆகவே ஒரு குறிப்பிட்ட திகதியில் கட்டுப்பாடுகளை நீக்குவோம் என்று முன்கூட்டியே வாக்குறுதி கொடுப்பது முட்டதனமானது என்று David Nabarro தெரிவித்துள்ளார்.