போருக்குத் தயாராகும் பிரித்தானியா... போர்க்கால அவசர எச்சரிக்கை மணி சோதனை
பிரித்தானிய அரசாங்கம் போருக்குத் தயாராகுமாறு எச்சரித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பிரித்தானியாவில் அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளது.
அவசர எச்சரிக்கை மணி
இதன் ஒருபகுதியாக இந்த ஆண்டு இறுதியில், அலைபேசி உட்பட அனைத்து கருவிகளிலும் அவசர எச்சரிக்கை மணி சோதனை முன்னெடுக்கப்பட உள்ளது. கடந்த 2023ல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டமானது அருகில் உயிருக்கு ஆபத்து இருந்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதாகும்.
போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், பிரித்தானியா தாக்கப்படும் நெருக்கடி இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, தற்போது மீண்டும் அவசர எச்சரிக்கை சோதனை முன்னெடுக்கப்பட உள்ளது.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்துள்ள நிலையில், அணு ஆயுத நாடுகள் வலுக்கட்டாயமாக தலையிடும் சூழலில், பிரித்தானியாவில் அவசர எச்சரிக்கை சோதனை முன்னெடுக்கப்படுகிறது.
இது வெறும் சோதனை முயற்சி மட்டுமே என விளக்கமளித்துள்ள அரசாங்கம், gov.uk/alerts என்ற இணைய பக்கத்தில் மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அலைபேசிகளும்
அவசர எச்சரிக்கை அமைப்பு, வரவிருக்கும் அச்சுறுத்தலைப் பற்றி பொதுமக்களுக்கு விரைவாகத் தெரிவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கடுமையான வெள்ளம், காட்டுத்தீ அல்லது தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் இந்த அவசர எச்சரிக்கை அமைப்பு பயன்படுத்தப்படும்.
உரிய அதிகாரிகளால் எச்சரிக்கை அனுப்பப்பட்டதும், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து அலைபேசிகளும் சைரன் போன்ற உரத்த ஒலியை எழுப்பி, அதிர்வுறும், எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் சோதனை முன்னெடுக்கப்படும் என்றே அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிரது. ஆனால் அது எப்போது என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |