"என் அன்புள்ள அப்பா" மறைந்த இளவரசர் பிலிப்பிற்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய மகன் சார்லஸ்!
பிரித்தானிய சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சார்லஸ் தனது மறைந்த தந்தை இளவரசர் பிலிப்புக்கு வீடியோ அறிக்கையின் மூலம் தனது அஞ்சலியை செலுத்தினார்
. பிரித்தானிய ராணி எலிசபெத்தின் கணவர் மற்றும் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப், தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச் சடங்குகள் ஏப்ரல் 17-ஆம் தேதி விண்ட்சர் கோட்டையின் மைதானத்திற்குள் நடைபெறும் என்றும் அதில் அரச குடும்பத்தினர் 30 பேர் மட்டுமே கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய சிம்மாசனத்தின் வாரிசு மற்றும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ராயல் குடும்பத்தினர் சார்பாக தனது தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ பதிவின் மூலம் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில் "நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, என் குடும்பமும் நானும் என் தந்தையை பெரிதும் இழக்கிறோம். என் அன்புள்ள பாப்பா மிகவும் சிறப்பு வாய்ந்த நபராக இருந்தார், எல்லாவற்றிற்கும் மேலாக அவரைப் பற்றி சொல்லப்பட்ட எதிர்வினை மற்றும் நெஞ்சை தொடுகின்ற விடயங்களால் ஆச்சரியப்படுகிறேன், அந்தக் கண்ணோட்டத்தில் நாங்கள், என் குடும்பம், அதற்கெல்லாம் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்றார்.
The Prince of Wales pays tribute to The Duke of Edinburgh on behalf of The Royal Family. pic.twitter.com/tDP0rkKGzc
— The Prince of Wales and The Duchess of Cornwall (@ClarenceHouse) April 10, 2021
மேலும் அவர் கூறுகையில், "எனது தந்தை, கடந்த 70 ஆண்டுகளாக, ராணிக்கும், எனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும், காமன்வெல்த் முழுவதற்கும் மிகவும் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பான சேவையை வழங்கியுள்ளார் என்று நான் குறிப்பாக சொல்ல விரும்புகிறேன்" என்றார்.