இளவரசர் பிலிப்பிடம் பேசிய கடைசி வார்த்தைகள்! முதல்முறையாக வெளிப்படுத்திய இளவரசர் சார்லஸ்
இளவரசர் சார்லஸ் தனது தந்தை இளவரசர் பிலிப்புடனான தனது கடைசி உரையாடலின் விவரங்களை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
இளவரசர் பிலிப், இறக்கும் தருவாயில்கூட, தன்னிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருந்ததாக இளவரசர் சார்லஸ் கூறினார்.
பிபிசி நிகழ்ச்சி ஒன்றிருக்கு பேட்டி அளித்த இளவரசர் சார்லஸ், ஏப்ரல் 8-ஆம் திகதி அன்று தனது தந்தை இளவரசர் பிலிப்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது அவருடைய 100-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி பேச முயற்சித்ததாகவும் கூறினார்.
இளவரசர் பிலிப் இந்த நிலையில் பெரிய கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்திருந்ததால், அவரிடம் சில தயக்கங்களுடன் இந்த விஷயத்தை பேசியதாக சார்லஸ் கூறினார்.
"'நாங்கள் உங்கள் பிறந்தநாளைப் பற்றி பேசுகிறோம்" என்று கூறியுள்ளார். பிலிப்பிற்கு லேசான காது கேளாமை பிரச்சினை இருந்ததன் காரணமாக சார்லஸ் அதையே மீண்டும் மீண்டும் சத்தமாக கூறியதாக தெரிவித்தார்.
"நாங்கள் உங்கள் பிறந்தநாளைப் பற்றி பேசுகிறோம்! மேலும் வரவேற்பு நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளோம்!" என்று சார்லஸ் கூறினார்.
அதற்கு பதிலளித்த பிலிப்: "நான் அதற்காகவாவது உயிரோடு இருக்க வேண்டும், இல்லையா?" என்று சிறிது நகைப்புடன் கூறியுள்ளார்.
அதற்கு "நீங்கள் அதைச் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்!" என்று சார்லஸ் கூறியுள்ளார்.
இதுதான் தனது தந்தையுடன் தான் பேசிய கடைசி வார்த்தைகள் என நினைப்பதாக சார்லஸ் கூறினார்.