இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்
வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
பிரித்தானிய மன்னரான சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது மனைவியான சாராவும் அந்த மோசமான நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்திக்க நேர்ந்துள்ளது.

முதன்முறையாக மௌனம் கலைத்துள்ள சகோதரர்
இந்நிலையில், முதன்முறையாக இளவரசர் ஆண்ட்ரூ சர்ச்சை தொடர்பில் மௌனம் கலைத்துள்ளார் ராஜகுடும்ப உறுப்பினர் ஒருவர். அவர், மன்னர் சார்லசின் கடைசி தம்பியான இளவரசர் எட்வர்ட்.

துபாயில் நடைபெறும் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்ற இளவரசர் எட்வர்டிடம் ஆண்ட்ரூ சர்ச்சையால் உருவான சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எட்வர்ட், என்னைப் பொருத்தவரை, பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வது உண்மையாகவே அவசியம் என நான் நினைக்கிறேன்.
இந்த சர்ச்சையைப் பொருத்தவரை யார் பாதிக்கப்பட்டவர்கள்? ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார் எட்வர்ட்.

எட்வர்டிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவர், CNN ஊடகவியலாளரான Eleni Giokos என்னும் பெண் ஆவார்.
இதை நான் கூறித்தான் ஆகவேண்டும், அது மிகவும் முக்கியமான விடயம், அது தலைப்புச் செய்திகளில் எல்லாம் இடம் பெற்றுவருகிறது, நீங்களும் அது முக்கியமான கேள்வி என கருதிவீர்கள் என எண்ணுகிறேன்.
ராஜகுடும்பமும், பிரதமரும்கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.
ஆகவேதான் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என Eleni கேட்ட கேள்விக்குதான் இவ்வாறு பதிலளித்துள்ளார் இளவரசர் எட்வர்ட்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |