குற்ற உணர்வு., தாய் டயானாவின் மரணத்திற்கு பிறகு அழுதேன்: மனம் திறந்த இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி தனது தாய் டயானாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு வித் குற்ற உணர்வில் அழுததாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி 10-ஆம் திகதி இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தககமான Spare வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த புத்தகத்தை விளம்பரப்படுத்த ITV-ன் டாம் பிராட்பியுடன் பங்கேற்ற நேர்காணலில் ஹரி இதனை தெரிவித்துள்ளளார்.
இளவரசர் ஹரி தனது 'ஸ்பேர்' புத்தகத்தில், அவரது தந்தை சார்லஸ் இளவரசி டயானாவின் மரணத்தை அறிந்ததும் அவரிடமிருந்து தனக்குக் கிடைக்காத ஆதரவைப் பற்றியும் பேசுகிறார்.
புதிய நேர்காணலில்.,
Getty Images
ITV-ன் டாம் பிராட்பிக்கு அளித்த புதிய நேர்காணலில், இளவரசர் ஹரி 1997-ல் தனது தாயார் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு முறை மட்டுமே அழுததாக வெளிப்படுத்தினார்.
அதில், இளவரசர் ஹரி தானும், அவரது சகோதரர் இளவரசர் வில்லியமும் டயானாவின் மரணத்தைத் தொடர்ந்து துக்கப்படுபவர்களை பொது இடங்களில் சந்தித்ததால் எந்த உணர்ச்சியையும் காட்ட முடியவில்லை என்றரர்.
அவர் தனது தாய் டயானாவை அடக்கம் செய்யும்போது அழுததாகக் கூறினார், மேலும் கென்சிங்டன் அரண்மனைக்கு வெளியே பூக்களை விட்டுச் சென்ற மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் நடந்து சென்றபோது "குற்ற உணர்ச்சியை" உணர்ந்ததாக ஒப்புக்கொண்டார்.
Getty Images
ஸ்பேர்
இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் இளவரசி டயானா இல்லாதது பற்றிய தகவல்கள் அவரது வரவிருக்கும் சுயசரிதையான "ஸ்பேர்"-ல் மீண்டும் மீண்டும் வருகிறது, இது ஜனவரி 10 அன்று வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், ஸ்பெயினில் ஆரம்பத்தில் பிரதிகள் விற்கப்பட்ட பின்னர் புத்தகத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளன.
புத்தகத்தில், இளவரசர் ஹரி தனது தாயின் இறுதிச் சடங்கில் பொதுவில் அழ முடியாமல் அவர் எதிர்கொண்ட சிரமம் மற்றும் அவரது சவப்பெட்டியின் பின்னால் நடந்தபோது அவர் அனுபவித்த உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பற்றி எழுதுகிறார்.
மேலும் அவர் இறந்ததை அறிந்தவுடன் அவரது தந்தை மன்னர் சார்லஸிடமிருந்து அவருக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காததைப் பற்றி எழுதுகிறார். டயானாவின் மரணச் செய்தியை தன் தந்தை சார்லஸிடம் தெரிவித்தபோது, தன் தந்தை தன்னைக் கட்டிப்பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.
Getty Images
புத்தகத்தை எழுதியதற்காக ஹரி மீதான விமர்சனங்கள்
பிரித்தானிய அரச குடும்பத்தை வேண்டுமென்றே சேதப்படுத்த முயற்சிப்பதாக சிலர் கருதுவதால், இளவரசர் ஹரி விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். கவனத்தை ஈர்க்கவே அவர் இந்த புத்தகத்தை எழுதியதாக பிரித்தானியாவில் சிலர் நினைக்கிறார்கள்.