மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியானதால் வெளிவந்துள்ள ஒரு இரகசியம்...
மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
மகாராணியார் மரணமடைவதற்கு முன் அவரை யார் யார் சந்தித்தார்கள் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
அதில், மகாராணியார் மதியம் 3.10 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியார் மரணமடைந்தபோது, அவருடன் யார் இருந்தது, யார் அவரைக் கடைசியாக சந்தித்தது என்பது குறித்த பல செய்திகள் வெளியாகின.
இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகியோர் மட்டும் ஒரு விமானத்தில் ஏறி மகாராணியார் மறைவுக்கு முன் அவரைப் பார்ப்பதற்காக புறப்பட்டதாகவும், அந்த விமானத்தில் இளவரசர் ஹரிக்கு இடமளிக்கப்படாததால், தனியார் விமானத்தில் புறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
மகாராணியார் மரணமடைந்த பின்னரே ஹரி பால்மோரலுக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹரி சோகமே உருவாக தலையில் கைவைத்தபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
ஆனால், மகாராணியாரின் இறப்புச் சான்றிதழ் இதுவரை வெளிவராத சில உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
Credit: Rex
ஆம், மகாராணியார் மதியம் 3.10 மணிக்கு இயற்கை எய்தினார் என்கிறது அவரது இறப்புச் சான்றிதழ். அப்படியானால், இளவரசர் ஹரி மட்டுமல்ல, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் ஆகிய யாருமே மகாராணியார் மரணமடைவதற்கு முன் அவரைப் பார்த்திருக்க முடியாது.
காரணம், 3.10க்கு அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். மாலை 5.00 மணிவாக்கில்தான் அவர்கள் பால்மோரல் வந்தடைந்தார்கள்.
இளவரசர் ஹரி இரவு 8.00 மணியளவில்தான் வந்து சேர்ந்தார்.
ஆக, இளவரசர் ஹரி மட்டுமல்ல, இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் உட்பட யாருமே மகாராணியார் இறப்பதற்கு முன் அவரைப் பார்க்கவில்லை என்பது தற்போது அவருடைய இறப்புச் சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது!
Credit: AP