நானும் மேகனும் அரச பட்டங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்: மறைமுகமாக கூறிய ஹரி
மேகனும் ஹரியும் ஒருபோதும் அரச பட்டங்களை கைவிட மாட்டார்கள் என்பதை ஹரி மறைமுகமாக விளக்கியுள்ளார்.
இளவரசர் ஹரி, அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய போதிலும், தானும், மேகன் மார்க்கலும் ஏன் தங்கள் பட்டங்களைத் தக்கவைத்துக் கொண்டோம் என்பதை விளக்கியுள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஜனவரி 2020-ல் அரச குடும்பத்தின் உழைக்கும் உறுப்பினர்களாக இருந்து விலக விரும்புவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.
அமெரிக்காவில் இருந்தபடி, ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்பட விரும்புவதாக தம்பதியினர் தெரிவித்தனர்.
Getty Images
ஆனால் இருவரும் இன்னும் தங்களுடைய அரச பட்டங்களை அவர்களுடன் தொடர்புடைய எந்தப் பொறுப்பும் இல்லாமல் மைத்துக்கொண்டு பணமாக்குகிறார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கலிபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்ததில் இருந்து ஹரி-மேகன் தம்பதி 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள Netflix ஒப்பந்தத்திலும், Spotify உடன் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி மேகனுக்கு வேறு பல வணிக முயற்சிகள் உள்ளன, மேலும் இருவரும் பொதுப் பேச்சு ஈடுபாட்டின் மூலம் நிறையப் பணத்தைப் பெறுகிறார்கள்.
நாளை (ஜனவரி 10) ஹரியின் நினைவுக்குறிப்புப் புத்தகமான Spare வெளியாகவுள்ள நிலையில், அதனை விளம்பரப்படுத்தும் விதமாக பல ஊடகங்களில் பேட்டியளித்த வருகிறார்.
அவ்வாறு சமீபத்தில், CBS-ன் 60 Seconds நிகழ்ச்சியில் ஆண்டர்சன் கூப்பருடன் ஒரு பரபரப்பான நேர்காணலின் போது அவர் அரச பட்டத்தை தொடந்து வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அரண்மனையிலிருந்து விலகிய பிறகும் ஏன் உங்கள் பட்டங்களை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ஹரி, "மேலும், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?" என்று பதிலுக்கு ஒரு கேள்வியை எழுப்பினார்.
இதன்மூலம், அவரும் மேகன் மார்க்கலும் தங்கள் அரச பட்டங்களை கைவிட விரும்பவில்லை என்பதை மறைமுகமாக தெளிவுபடுத்தினார்.