இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, ஏராளமான இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பில் வெளியிட்டுவரும் ஆவணங்களில், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனின் பெயர்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு சிக்கல் உருவானது.
என்றாலும், அவர்கள் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம், அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன.

ஆனால், அந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும், தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதையடுத்து அவர்களும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.
ஒரு எச்சரிக்கை செய்தி
இந்நிலையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் தங்கள் தாயுடன் மியாமியிலிருந்த எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
விடயம் என்னவென்றால், இளவரசிகள் இருவரும், தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார். அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.

ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன.
மேலும், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், எப்ஸ்டீன் அனுப்பிய சிலரை அழைத்துக்கொண்டு, அவர்களுக்கு பக்கிங்காம் அரண்மனையை சுற்றிக் காட்டியதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆக, இந்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் நிலைமை மிக மோசமாக ஆகப்போவதாக அவர்களுக்கு தற்போது எச்சரிக்கை செய்தி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டபோது கூட, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் அவர்கள் தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர்வார்கள் என அரண்மனை வட்டாரம் தெரிவித்திருந்தது.
ஆனால், அவர்கள் இருவருடைய பெயர்களும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம் பிடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளதையடுத்து, கடந்த சில வாரங்களாக ராஜ குடும்பம் அமைதி காக்கிறது.
ஆக, இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும்கூட, தங்களுக்கு முன்போல் அரண்மனையில் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன் என்கிறார் The Telegraph பத்திரிகையின் ராஜ குடும்ப பிரிவு ஆசிரியரான Hannah Furness என்பவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |