தாயைக் கட்டியணைத்து கண்ணீர் விடும் குட்டி இளவரசி: கதறும் ரசிகர்கள்
பிரித்தானிய இளவரசி கேட் சமீபத்தில் மூன்று சிகரங்களில் ஏறும் சவால் ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்தது நினைவிருக்கலாம்.
மூன்று சிகரங்களில் ஏறும் சவால்
பிரித்தானியாவின் மூன்று பகுதிகளிலுள்ள, முன்று உயர்ந்த சிகரங்களை 24 மணி நேரத்துக்குள் ஏறிமுடிக்கும் சவால் ஒன்று பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
இங்கிலாந்திலேயே உயரமான மலைச்சிகரமான Scafell Pike, ஸ்கொட்லாந்திலேயே உயரமான மலைச்சிகரமான Ben Nevis மற்றும் வேல்ஸ் நாட்டிலேயே உயராமன மலைச்சிகரமான Snowdon ஆகிய மூன்று மலைச்சிகரங்களையும், 24 மணி நேரத்துக்குள் ஏறி முடிக்கவேண்டும் என்பதே சவால்.
இந்த சவாலை முடிக்க, கடினமான 37 கிலோமீற்றர் நடைப்பயணம், 10,052 அடி உயர மலையேற்றம் மற்றும் மூன்று மலைகளுக்கும் இடையில் 743 கிலோமீற்றர் கார் பயணம் என அனைத்தையும் 24 மணி நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும்.
ரசிகர்களை கதறவைத்த காட்சி
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி, இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது நினைவிருக்கலாம்.
அந்த நாட்கள் கேட் மற்றும் ராஜ குடும்ப ரசிகர்களை கலங்க வைத்ததை மறக்கமுடியாது.
ரசிகர்களுக்கே அப்படி ஒரு கவலை என்றால், அவர் பெற்ற பிள்ளைகள் நிலை எப்படி இருந்திருக்கும். சின்னஞ்சிறு வயதில், தங்கள் தாய்க்கு புற்றுநோய் என தெரியவந்ததும், அந்த பிள்ளைகள் எப்படி பயந்திருப்பார்கள்!

இந்நிலையில், இளவரசி கேட் மூன்று சிகரங்கள் சவாலை முடித்ததும், அவரது பிள்ளைகள் நடந்துகொண்ட விதம், அவர்கள் தங்கள் தாய் மீது எவ்வளவு அக்கறையும், அன்பும், அவர் குறித்து எவ்வளவு கவலையும் கொண்டுள்ளார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டின.
தன் தாய் மலையேற்றத்தை முடித்துத் திரும்பியதும், தலையில் கைவைத்துக்கொண்டு குட்டி இளவரசி சார்லட் அழ, அவரை கேட் அணைத்துக்கொள்ள, சார்லட் கண்ணீர் விட்டுக் கதற்கும் காட்சியைக் கண்ட மக்கள் தாங்களும் கதறிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
I’m sobbing 🥺😭
— Belle (@RoyallyBelle_) July 5, 2026
Princess Charlotte’s reaction to seeing her mum after Catherine completed the Three Peaks Challenge for the Royal Marsden Cancer Charity. pic.twitter.com/vyx80eQa2s
அதேபோல, கேட் தன் மூத்த மகனான ஜார்ஜின் தோள் மீது கைபோட்டுக்கொள்ள, இளவரசியின் குறும்புக்கார மகனான லூயிஸ், தன் தாயின் கையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அவர் முகத்தையே பார்க்க, அதை பின்னாலிருந்து சார்லட் பார்க்கும் காட்சியை யார் பார்த்தாலும் அவர்களுடைய கண்கள் குளமாகிவிடும்.

சமீபத்தில்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த தங்கள் அம்மா நல்லபடியாக மலையேற்றத்தை முடித்துவிடுவாரா என அவர்கள் பயந்துகொண்டே இருந்தது போலுள்ளது அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது.
இளவரசி கேட், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காகவும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், மூன்று சிகரங்கள் சவாலை வெற்றிகரமாக முடித்த முதல் ராஜ குடும்ப உறுப்பினர் இளவரசி கேட்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |