ஹரி மீது இளவரசி டயானா கடுங்கோபம்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் தகவல்
தன் மரணத்தை இளவரசர் ஹரி சுயலாபத்துக்காக பயன்படுத்துவதால், இளவரசி டயானாவின் ஆவி கடுங்கோபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.
டயானா குறித்து ஹரி அளித்துள்ள பேட்டி
இளவரசர் ஹரி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
விரைவில் வெளியாக இருக்கும் அந்த பேட்டியில், டயானாவின் மரணம் குறித்த இதுவரை வெளியாகாத தகவல்கள் சிலவற்றை ஹரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Image: Tim Graham Photo Library via Getty Images
ஆவிகளுடன் பேசும் பெண் கூறியுள்ள தகவல்
இந்நிலையில், ஹரியின் செயல்கள் இளவரசி டயானாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார், ஆவிகளுடன் பேசுபவரான Deborah Davies என்னும் பெண்.
இளவரசி டயானாவின் மரணம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஹரிக்கே நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும் நிலையில், ஹரி டயானாவின் மரணத்தைத் தன்னுடைய சுயலாபத்துக்காக பயன்படுத்துவதால் டயானா கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் Deborah.
Image: ITN
இளவரசி டயானா தன்னாலானமட்டும் ராஜ குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற நினைக்கும் நிலையில், ஹரி, ஒரு நாள் மன்னராக இருக்கும் வில்லியமுடைய எதிர்காலத்தை பாழாக்குவதாக கருதும் டயானா, அவர் எல்லை மீறிப்போகிறார் என எண்ணுவதாகத் தெரிவிக்கிறார் Deborah.
டயானா கடுங்கோபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கும் Deborah, ஹரி இந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது நல்லது என்கிறார்.
image: AFP/Getty Images
Image: supplied