பொது நிகழ்ச்சியை திடீரென தவிர்த்த இளவரசி கேட்: காரணம் என்ன?
பிரித்தானிய இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், மன்னர் சார்லஸ், ராணி கமீலா மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் இளவரசி கேட் மட்டும் கலந்துகொள்ளவில்லை.
அந்த நிகழ்ச்சியின் விருந்தினர் பட்டியலில் இளவரசி கேட்டின் பெயர் இருந்தும், கடைசி நேரத்தில் அவர் நிகழ்ச்சியைத் தவிர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
விடயம் என்னவென்றால், புற்றுநோய் பாதிப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. புற்றுநோய் சிகிச்சை முடிந்தாலும், சம்பந்தப்பட்டவர்களில் சாதாரண வாழ்க்கை என்பது மற்றவர்களைப் போன்றது அல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
ஜனவரியில் தனது புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த கேட், புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்களுக்குத் தெரியும், அதற்குப் பின்னான புதிய வாழ்க்கையுடன் அட்ஜஸ்ட் செய்துகொள்ள நீண்ட காலம் பிடிக்கும் என்பது, என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த முறை மன்னருடைய அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என வருந்திய கேட், இம்முறை அதை தவறவிடவில்லை.
அப்படியிருக்கும் நிலையில், திடீரென பொது நிகழ்ச்சி ஒன்றிலிருந்து அவர் விலலியிருக்கிறாரென்றால், அதற்கு அவரது உடல் நிலை காரணமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |