ராணியார் இறுதிச் சடங்கின் போது பிரித்தானியாவால் மன்னிப்பு கேட்கப்பட்ட இளவரசி: வெளியான புதிய தகவல்
இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டிருந்தது.
இளவரசர் ஃபிரடெரிக் இளவரசி மேரியுடன் ஐக்கிய நாடுகள் மன்ற பொது அவையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குகளுக்கு தவறாக அழைப்பு விடுத்ததாக வெளிவிவகார அலுவலகத்தால் மன்னிப்பு கேட்கப்பட்ட டென்மார்க் இளவரசி தற்போது நியூயார்க் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தாயாரான 50 வயது இளவரசி மேரியிடம் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டிருந்தது.
@mega
முதலில் டென்மார்க் ராணியார் மார்கரெட்டுக்கும் இளவரசி மேரி உட்பட மூன்று அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பற்ற முடிவு செய்திருந்த விதிகளின் படி ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்பதே.
இதனையடுத்து கடைசி நிமிடத்தில், இளவரசி மேரிக்கான அழைப்பை ரத்து செய்வதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் வெளிவிவகார அலுவலகம் கூறியிருந்தது.
@mega
இருப்பினும், டென்மார்க் ராணியாரும் இளவரசி மேரியின் கணவரும் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் டென்மார்க் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் தமது மனைவி இளவரசி மேரியுடன் ஐக்கிய நாடுகள் மன்ற பொது அவையில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.
@getty
முன்னதாக ஃபிரடெரிக் மற்றும் அவரது தாயார் இரண்டாம் மார்கரெட் ராணியார் ஆகியோருக்கு லண்டனில் ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது.
@mega