இளவரசர் பிலிப் நினைவாக பிள்ளைகளுக்கு பெயர் வைத்த பேத்திகள்... ஆனால் அவர்களை சந்திக்காமலே தாத்தா இறந்துபோன துயரம்
மகாராணியாரின் பேரப்பிள்ளைகள் என்றாலே, பெரும்பாலானோருக்கு நினைவில் வருவது இளவரசர் வில்லியமும் ஹரியும்தான்...
ஆனால், உண்மையில் அவர்களுக்கு பேரப்பிள்ளைகள் மட்டுமே எட்டு பேர் இருக்கிறார்கள், அதுபோக, பேரப்பிள்ளைகளின் பிள்ளைகள் வேறு...
அந்த பேரப்பிள்ளைகளில் இளவரசி சாரா மற்றும் இளவரசி யூஜீனி ஆகியோருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது.
அவர்கள் இருவருமே தங்கள் தாத்தாவான பிலிப் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
ஒரு பேட்டியின்போது, எங்கள் தாத்தா மிகவும் உறுதியானவர், குடும்பத்தில் எங்கள் யாருக்கு ஆலோசனை வேண்டுமென்றாலும் தாத்தாவிடம்தான் செல்லுவோம் என்று கூறியிருந்தார் யூஜீனி.
ஆக, அவர் தன் தாத்தாவை கௌரவிக்க அவரது பெயரை தனது குழந்தைக்கு வைத்ததில் ஆச்சரியமில்லைதான்.
அவர் தன் மகனுக்கு ஆகஸ்ட் பிலிப் ஹாக் புரூக்ஸ்பேன்க் என்று பெயர் வைத்துள்ளார்.
இளவரசி சாரா தன் மகனுக்கு லூகாஸ் பிலிப் டிண்டால் என்று பெயரிட்டுள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யூஜீனி மற்றும் சாரா இரண்டு பேருக்குமே, தங்கள் குழந்தைகளை தங்கள் தாத்தாவான பிலிப்புக்கு அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது!