IPL 2025; கோப்பை வெல்வது யார்? வெற்றி பெரும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும்?
மார்ச் 22 ஆம் திகதி கோலாகலமாக துவங்கிய 18வது ஐபிஎல் தொடர், இன்று முடிவடைய உள்ளது.
2025 ஐபிஎல் இறுதிப்போட்டி
இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாததால், எந்த அணி வெற்றி பெரும் என கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஐபிஎல் நிறைவு விழா நிகழ்ச்சியில், ஆபரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் வகையில், முப்படை தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அணிகளுக்கான பரிசுத்தொகை
அதே போல், ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்படும்.
இறுதிபோட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.13 கோடியும், புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4வது இடங்களில் உள்ள அணிகளுக்கு ரூ.7 கோடி மற்றும் ரூ. 6.5 கோடி வழங்கப்படும்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ரூ. 4.8 கோடியாக இருந்த பரிசுத்தொகை, 4 மடங்கு உயர்ந்து ரூ.20 கோடி வழங்கப்படுகிறது.
வீரர்களுக்கான பரிசுத்தொகை
இதே போல், அதிக ஓட்டங்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பி வெல்லும் வீரருக்கு ரூ.10 லட்சமும், அதிக விக்கெட்கள் எடுத்து ஊதா தொப்பி வெல்லும் வீரருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
மேலும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் (Super Striker) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், பவர் பிளேயர் (Power Player) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரருக்கு ரூ.10 லட்சமும், கேம் சேஞ்சர் விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
வளர்ந்து வரும் வீரர் (Emerging Player) விருது பெறுபவருக்கு ரூ.20 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player) விருது பெறுபவருக்கு ரூ.10 லட்சமும், சிறந்த கேட்ச் பிடித்தவருக்கு ரூ.10 லட்சமும், வழங்கப்படும்.
2025 ஐபிஎல் தொடர் முதல் ஊதியத்துடன் கூடுதலாக, ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி ஊதியமாக, ஓவ்வொரு போட்டிக்கும் ரூ.7.5 லட்சம் அளிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |