2023இல் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு சிக்கல்கள்: ஆவிகளுடன் பேசுபவர் கணித்துள்ள மோசமான விடயங்கள்...
2023ஆம் ஆண்டு பிரித்தானிய ராஜ குடும்பம் பல பிரச்சினைகளை சந்திக்க இருப்பதாக, மகாராணியாரின் மரணத்தை துல்லியமாக கணித்த, ஆவிகளுடன் பேசும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் குறித்து கணித்த ஆவிகளுடன் பேசும் நபர்
Craig Hamilton-Parker என்பவர் உலகில் நடக்கவிருக்கும் பல விடயங்களை முன்கூட்டியே கணித்தவர் ஆவார். தனது 20 வயதுகளில் இந்தியாவுக்குச் சென்றிருந்த Craig, அங்குள்ள நாடி ஜோதிடர்களால் ஈர்க்கப்பட்டார். அதன் பின்புதான் அவர் இவ்வாறு பின் நடக்கவிருக்கும் விடயங்களை கணிக்கத் துவங்கினார்.
அவர் துல்லியமாக கணித்த விடயங்களில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது, பிரெக்சிட், பிரித்தானிய மகாராணியாரின் மரணம் மற்றும் மன்னர் சார்லஸ் மீது மக்கள் முட்டைகள் எறிவது போன்ற விடயங்கள் ஆகும்.
Image: Getty Images
2023ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் நிகழவிருக்கும் பிரச்சினைகள் குறித்து கணிப்பு
இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் நிகழவிருக்கும் பிரச்சினைகள் குறித்து சில விடயங்களை கணித்துள்ளார் Craig.
அவற்றில் முக்கியமானது, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு மிக மோசமான விடயம் ஒன்று நடக்கவிருப்பதாக Craig கணித்துள்ளதாகும்.
அத்துடன், மன்னர் சார்லஸ் முடிசூடிய முதல் ஆண்டு அவருக்கு நன்றாக இருக்கும் என்றும், ஆனால், பின்னர் அவரது மன நலனில் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார் Craig.
மேலும், ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் விபத்தில் சிக்குவார், அது ஒருவேளை அவர் கீழே விழுவதாகக் கூட இருக்கலாம் என்றும், ராஜ குடும்பத்திலுள்ள பிள்ளைகளில் ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார் Craig.
ராஜ குடும்பம் குறித்து இத்தனை விடயங்களை கணித்துள்ள Craig, சீனாவில் ஒரு புரட்சி வெடிக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
image: POOL/AFP via Getty Images