மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும் வாழைப்பழம்! இந்த பொருட்களுடன் பயன்படுத்தினாலே போதுமாம்
இன்றைக்கு பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினைகளுள் மலச்சிக்கல் முதலிடத்தில் உள்ளது.
இது உடல் உழைப்பின்மை, தவறான உணவுப்பழக்கம் காரணமாக ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் உழைப்பின்மை. வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறையாமல் பயணம் செய்வது, வலியை குறைக்கும் (pain killer) மாத்திரைகள் சாப்பிடுவது, மாவுச்சத்து நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படும்.
இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
மலச்சிக்கலுக்கு உதவும் இயற்கை வைத்தியங்களை தேடினால் உங்கள் தேர்வு முதலில் வாழைப்பழமாகத்தான் இருக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள இது குடல் இயக்கத்தை தூண்டும் மற்றும் மலச்சிக்கலை நீக்கும். இதை எப்படி சேர்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
- வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதை தண்ணீர் மற்றும் தேனுடன் கலக்கவும். அல்லது நறுக்கிய வாழைப்பழம் மீது தேன் சேர்த்தும் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 1- 2 முறை சாப்பிடலாம்.தேன் இலேசான மலமிளக்கி விளைவை கொண்டிருக்கிறது. இது மலச்சிக்கலை போக்க உதவும்.
-
ஒரு கப் பப்பாளியை வாழைப்பழத்துண்டுகளுடன் கலக்கவும். இதை சேர்த்து அடித்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து குடிக்கவும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் இதை குடிக்க வேண்டாம். பப்பாளியின் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் கொண்டவை. இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் சிறப்பாக உதவும்.
- வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஓட்ஸ் உடன் தண்ணீர் மர்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து வாழைபழத்துண்டுகள் மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். நாள் ஒன்றுக்கு 1- 2 முறை சாப்பிட வேண்டும். ஓட்ஸ் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது. இது மலச்சிக்கலின் அறிகுறிகளை போக்க உதவும்.