உலக வரைபடமே போரால் மாறிப்போகும்: எச்சரிக்கும் ஜோதிடக் கலைஞர்
உலகத் தலைவர்கள் சிலருடைய நாடு பிடிக்கும் ஆசையால் உலக வரைபடமே மாற இருக்கிறது என்கிறார் ஜோதிடக் கலைஞர் ஒருவர்.
உலக வரைபடமே மாறிப்போகும்
ட்ரம்ப் பதவிக்கு வருவதை துல்லியமாகக் கணித்தவரும், கோவிட் தாக்கும் என எச்சரித்தவருமான ஜோதிடக்கலைஞர் ஜெசிகா ஆடம்ஸ், 2026இல், போரால் உலக வரைபடமே மாறிப்போகும் என எச்சரித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியது ஈரான் போரைக் குறித்து அல்ல. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் காசா மோதல்களைக் குறித்து!

உலக வரைபடம் மாறும், எல்லைகள் மாறும், சரி எல்லாம் ஒருவழியாக முடிந்துவிட்டது என்று நினைப்போம். ஆனால், முடியவில்லை. 2033 வரை இந்த மாற்றங்கள் தொடரும் என்கிறார் ஜெசிகா.

ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதியாகிய புடின், உக்ரைனுடன் சமாதானம் செய்துகொள்ள விதித்துள்ள நிபந்தனைகளில், ரஷ்யா ஏற்கனவே தன்னுடன் இணைத்துவிட்ட Donetsk, Luhansk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய நான்கு பகுதிகளும் ரஷ்யாவுடையதாக இருக்கவேண்டும் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |