உதவுங்கள்... இலங்கை மக்களை நாடும் காவல்துறை
இலங்யைில் ஏற்பட்ட கலவரத்தின் போது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுமாறு பொதுமக்களிடம் இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இலங்கை தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் பலியாகியுள்ளனர். 231 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கலவரத்தின் போது வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க உதவுமாறு பொதுமக்களிடம் இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனுரவுடன் அமெரிக்கத் தூதுவர் திடீர் சந்திப்பு!
அதன்படி, நாடு தழுவிய பதற்றத்தை அடுத்து வீடுகள் மற்றும் வணிக இடங்களை சூறையாடிய நபர்களின் விவரங்களை 1997 மற்றும் 119 என்ற அவசர தொலைபேசி எண்கள் மூலம் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற தகவல்களை வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர்களின் பெயர்கள் வெளியில் தெரியாதவாறு பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022