நொறுங்கும் காஸா... இஸ்ரேலுக்கு எதிராக துணிந்து முடிவெடுத்த ஜேர்மனியின் பூமா நிறுவனம்
இஸ்ரேலின் தேசிய கால்பந்து அணிக்கு அளித்துவந்த நிதியுதவியை ஜேர்மனியின் பூமா நிறுவனம் நிறுத்துகிறது என்று பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
இஸ்ரேல் கால்பந்து அணிக்கு எதிராக
இது தொடர்பில் பூமா நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில், இஸ்ரேல் கால்பந்து அணிக்கு எதிரான இந்த முடிவு பூமா நிர்வாகத்தால் ஓராண்டுக்கு முன்னரே எடுக்கப்பட்டதாகவும்,
@afp
ஆனால் காஸா போர் தொடர்பில் தற்போது அரபு நாடுகளில் தீயாக பரவி வரும் புறக்கணிப்பு அழைப்புகளுக்கும் தங்களின் முடிவுக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ளது.
மேலும், பூமா நிறுவனம் 2024 முதல் இஸ்ரேல் கால்பந்து அணிக்கு நிதியுதவி அளிப்பதை முற்றிலுமாக நிறுத்தும் எனவும், இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச அளவில் வருவாய் இழப்பு ஏற்படக் கூடாது என்ற காரணங்களாலையே, பூமா நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேல் தொடர்பில் சர்வதேச நெருக்கடி
பூமா நிறுவனம் இன்னொரு மிகப்பெரிய அணியுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. காஸா போர் தொடங்கிய பின்னர், உலகின் மூன்றாவது மிகப்பெரிய விளையாண்டு பிராண்ட் நிறுவனமான பூமா, இஸ்ரேல் தொடர்பில் சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டதுடன், பூமா தயாரிப்பு பொருட்களை மொத்தமாக புறக்கணிக்கவும் உலக அளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.
@PACBI/ Twitter
மட்டுமின்றி, மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகளை பூமா நிறுவனம் ஆதரிப்பதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கு கரையில் இஸ்ரேலிய மக்களின் குடியமர்த்தல் என்பது பெரும்பாலான சர்வதேச சமூகத்தால் சட்டவிரோதமாகவே கருதப்படுகிறது.
ஆனால் பூமா நிர்வாகத்தால் அந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனம் இஸ்ரேல் கால்பந்து அணிக்கான நிதியுதவி மட்டுமே அளிப்பதாகவும், அந்த கால்பந்து அணியின் அரசியலில் தலையிடுவதில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |