IPL ஏலம் இல்லை: ஆனால் கையில் குழந்தை ஒரு அற்புதமான உணர்வு!
தனது கையில் ஏலம் எடுப்பதற்கான துடுப்பு(baddle) இல்லாமல் கையில் அழகான குழந்தையை வைத்திருப்பது மிக அற்புதமான அனுபவமாக இருப்பதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.
IPLயின் மெகா ஏலம் இன்று பெங்களுருவில் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
All set to watch the Tata IPL Auction. Feels amazing to have a cute warm baby in my arms instead of the red auction paddle ? On a serious note my heart is racing & I cannot wait for our new PBKS squad. All the best @PunjabKingsIPL ?? Let’s execute our plans and stay focused. pic.twitter.com/CEPNrJgmOh
— Preity G Zinta (@realpreityzinta) February 12, 2022
எப்போதும் பஞ்சாப் அணிக்காக ஏலம் எடுக்கும் குழுவில் அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவ்வாறு நேரடியாக கலந்து கொள்ளாத ப்ரீத்தி ஜிந்தா ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்களையும் அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.
அதில், ipl ஏலத்தின் போது எப்போதும் தனது கையில் ஏலம் எடுக்கும் துடுப்பு(baddle) இருக்கும் ஆனால் மாறாக இந்த முறை கையில் ஒரு அழகான குழந்தையை வைத்து இருப்பது மிக அற்புதமான அனுபவமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாபின் புதிய அணியை தெரிந்து கொள்ளவதற்காக தனது இதயம் வேகமாக துடிப்பாதகவும், கருத்தோடு இருந்து திட்டமிட்டபடி செயல்படுமாறு அவரது குழுவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா ஒரு கையில் அழகான குழந்தையுடன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.