பதற்றமான சூழலில் போர்கள் குறித்து புடின், ட்ரம்ப் உரையாடல்: என்ன பேசினார்கள்?
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதிகளான ட்ரம்ப், புடின் தொலைபேசி அழைப்பில் போர்கள் குறித்து விவாதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பதற்ற நிலை
மத்திய கிழக்கில் ஈரான் மாற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலை, உலகின் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும், கடந்த டிசம்பருக்கு பிறகு மீண்டும் தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியுள்ளனர்.
விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் இதுகுறித்து கூறுகையில்,
முக்கியமாக விவாதித்தனர்
"ஈரானுடனான மோதலை சுற்றியுள்ள சூழ்நிலை மற்றும் உக்ரேனிய கேள்வியைத் தீர்ப்பது குறித்து அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்து வரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இரு ஜனாதிபதிகளும் முக்கியமாக விவாதித்தனர்" என்றார்.

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு "விரைவான அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுக்கு" புடின் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். தலைவர்களின் அழைப்பை வெள்ளை மாளிகை கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் உக்ரைன் போரில் ட்ரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை புடின் நேர்மறையாக மதிப்பிட்டார் என்றும், உரையாடல் தீவிரமானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்றும் ஆலோசகர் கூறினார்.
[TCV58N ]
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |