விளாடிமிர் புடினின் கைது... உண்மையில் போர் பிரகடனம்: நாட்டின் ஜனாதிபதி ஒருவர் எச்சரிக்கை
உக்ரைன் போர் குற்றம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கைது செய்யப்பட்டால், அது உண்மையில் போர் பிரகடனமாக இருக்கும் என தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
போர் பிரகடனமாக இருக்கும்
ஜோகன்னஸ்பர்க் நகரில் முன்னெடுக்கப்படும் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்வார் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், புடின் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்த நிலையில், அது ஒரு போர் பிரகடனமாக இருக்கும் என தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோசா எச்சரித்துள்ளார்.
@getty
ஜோகன்னஸ்பர்க் நகரில் முன்னெடுக்கப்படும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் போர் குற்றம் தொடர்பில் அவரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடான தென்னாப்பிரிக்கா, விளாடிமிர் புடினை கைது செய்யும் பொருட்டு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.
@AFP
புடினை கைது செய்யுங்கள்
ஆனால், தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்படியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதை ஜனாதிபதி சிரில் ரமபோசா வெளிப்படையாக எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியை வெளிநாட்டு மண்ணில் கைது செய்வது என்பது போர் பிரகடனம் என ரஷ்யாவும் எச்சரித்துள்ளது. இதனிடையே, ஜோகன்னஸ்பர்க் நகரின் பல பகுதிகளில் ஜனாதிபதி ரமபோசாவே, புடினை கைது செய்யுங்கள் என வலியுறுத்தி பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.
@AFP
விளாடிமிர் புடின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கால் பதித்தால், அவரை கைது செய்ய வேண்டிய நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார் ஜனாதிபதி ரமபோசா. புடின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வருகை தருவார் என்றால், அது தென்னாப்பிரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |