மீண்டும் மக்கள் வயிற்றில் அடிக்கும் புடின்: உணவு தானிய கிடங்குகள் மீது தாக்குதல்
உக்ரைன் போர் துவங்கியபோது, ஏதோ இரண்டு நாடுகளுக்குள் சண்டை என வேடிக்கை பார்த்த எல்லா நாடுகளும் போரின் தாக்கத்தை எதிர்கொண்டன, இப்போதும் எதிர்கொண்டு வருகின்றன.
உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு
பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்கள் விநியோகித்துவந்த உக்ரைன் தாக்கப்பட்டதால், சரியாக உணவு தானிய விநியோகம் நடைபெறாமல், பல நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு உருவானது.
பல நாடுகளில் அப்போது உயர்ந்த விலைவாசி இன்னமும் குறையவேயில்லை.
மீண்டும் தானியக் கிடங்குகள் மீது தாக்குதல்
மீண்டும் மீண்டும் தாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறிக்கொண்டே, பொதுமக்கள் வாழும் இடங்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கிறது ரஷ்யா.
இந்நிலையில், நேற்றிரவு உக்ரைன் நகரங்களான ஒடிஷா மற்றும் கீவ் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
#Odesa.
— Сергій Крук (@Serhiy_Kruk) July 19, 2023
Brave rescuers eliminate the consequences of Russian terror. Civilian objects were again hit by the occupiers. 5 people were injured.
From SESU about 140 rescuers and 36 machines were involved. Thank you!#RussiaisATerroistState pic.twitter.com/pP9Vx5MpPp
தாக்குதலில் ஒடிஷாவிலுள்ள உணவு தானியக் கிடங்குகளில் தீப்பற்றியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்புவீரர்கள் போராடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலக தலைவரான Andriy Yermak, இந்த தாக்குதல், உலகின் தெற்கு பகுதியிலுள்ள மக்கள் பட்டினி கிடப்பதையே ரஷ்யா விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்றும், ரஷ்யா உணவு தானியக்கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் அகதிகள் பிரச்சினையை உருவாக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |