அமெரிக்க உளவு வலைக்குள் சிக்கி விடுவோம்! ரஷ்யாவில் ஐபோன்களை பயன்படுத்த தடை விதித்த புடின்
அமெரிக்க உளவு பயம் காரணமாக ரஷ்ய அரசு ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்த ஜனாதிபதி புடின் தடை விதித்துள்ளார்.
ஐபோன்கள் பயன்படுத்த தடை
அமெரிக்க பாதுகாப்பு சேவைகளால் தகவல்கள் உளவு பார்க்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக ரஷ்ய அரசு ஊழியர்கள் ஐபோன்களை பயன்படுத்த ஜனாதிபதி புடின் தடை விதித்துள்ளார்.
அத்துடன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான போன்களும் ஹேக் செய்யப்படலாம் என்ற அச்சத்தால், இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் தங்களது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுமாறு புடின் கட்டளையிட்டுள்ளார்.
Getty Images
இதற்கு மாற்றாக கலிஃபோர்னியாவில் கூகுள் வடிவமைத்த இயங்குதளத்தை பயன்படுத்தும் அல்லது ரஷ்யாவின் லினக்ஸ் அடிப்படையிலான அரோரா மென்பொருளை பயன்படுத்தும் செல்போன்களை உபயோகித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரிசீலனையில் உள்ள சாதனங்கள்
இந்நிலையில் புடினின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வழங்கிய தகவலில், அரசு ஊழியர்கள் வேலை நோக்கங்களுக்காக எந்த ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Getty Images
அவை அமெரிக்காவின் NSA செல்டென்ஹாமில் உள்ள GCHQ போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்களுக்கு வெளிப்படையானவை என எச்சரித்தார்.
இதற்கிடையில் அனைத்து ரஷ்ய ஊழியர்களுக்கும் புதிய மற்றும் பாதுகாப்பான சாதனங்களை வழங்குவதற்கான சாத்தியத்தை ரஷ்ய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான Rostec இன் துணை நிறுவனமான Smartecosystem ஆல் தயாரிக்கப்படும் AYYA T1 ஸ்மார்ட்ஃபோன்களில், கேமரா மற்றும் மைக்ரோஃபோனை "ஆன்டி-வயர் டேப்பிங்" அம்சமாக செயலிழக்கச் செய்ய இயற்பியல் சுவிட்சை கொண்டுள்ளது.
Getty Images
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் இந்த சாதனம் சோதிக்கப்பட்டு வரும் நிலையில், சோதனை வெற்றியடைந்தால் அரை மில்லியன் தொலைபேசிகளுக்கு ஆர்டர் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.