புடினுக்கு துரோகம் செய்த அவரது சொந்த வீரர்கள்: வெளியாகியுள்ள புதிய தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு, அவருடைய சொந்த வீரர்களே துரோகம் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடற்படை தளம் மீது தாக்குதல்
கிரிமியா நாட்டிலுள்ள Sevastopol என்னும் இடத்தில், ரஷ்யாவுக்குச் சொந்தமான கடற்படை தளத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.
Credit: East2West
அந்த அலுவலகம், கடந்த வாரம் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. பழுது பார்க்க முடியாத அளவுக்கு அந்த கட்டிடம் சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், புடினால் தேர்வு செய்யப்பட்ட, Commander Viktor Sokolov என்னும் தளபதி உட்பட, 32 ரஷ்ய வீரர்கள் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புடின் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ள பரபரப்பு தகவல்
இந்நிலையில், அந்த ரஷ்ய கடற்படை தளம் தாக்கப்படுவதற்கு புடினுடைய சொந்த வீரர்களே உதவியதாக ATESH என்னும் புடின் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்கள் அமைப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டு ரஷ்ய வீரர்கள் அந்த கட்டிடம் குறித்த உளவுத்துறை தகவல்களை தங்களுக்கு லீக் செய்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Credit: Reuter
அவர்கள் புடினுக்கு துரோகம் செய்ய பணம் மட்டும் காரணம் இல்லை என்று கூறும் அந்த அமைப்பினர், இந்த தகவல்களை தங்களுக்கு ரகசியமாக அளித்த அந்த ரஷ்ய வீரர்களும், புடின் ஒரு போர்க்குற்றவாளி என நம்புவதாலும், இந்த போர் நிறுத்தப்படவேண்டும் என அவர்கள் எண்ணுவதாலுமே அவர்கள் புடினுக்கே துரோகம் செய்ய முன்வந்ததாக தெரிவிக்கிறார்கள்.
Credit: AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |