ஜெலென்ஸ்கி - புடின் சந்திப்புக்கு வாய்ப்பு... நிபந்தனைகளை முன்வைக்கும் ரஷ்யா
சில நிபந்தனைகள் எட்டப்பட்டால் மட்டுமே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் ஜெலென்ஸ்கியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
என்ன நிபந்தனை
ரஷ்யாவின் பார்வையில் என்ன நிபந்தனைகள் என்பதை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் குறிப்பிடவில்லை. கடந்த 2019 டிசம்பர் மாதத்திற்கு பின்னர் ஜெலென்ஸ்கியும் புடினும் நேரடியாக சந்தித்ததும் இல்லை.
இந்த வாரம் துருக்கியில் தன்னைச் சந்திக்குமாறு ரஷ்ய ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி சவால் விடுத்திருந்தார், ஆனால் அதற்கு பதிலாக புடின் உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்க உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்பினார்.
மார்ச் 2022 க்குப் பிறகு முதல் இருதரப்பு, நேருக்கு நேர் பேச்சுவார்த்தையானது வெள்ளிக்கிழமை துருக்கியில் நடந்தது. தொடர்புடைய பேச்சுவார்த்தையில் புடின்-ஜெலென்ஸ்கி சந்திப்பு குறித்த பிரச்சினையை எழுப்பியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் இரு தரப்பினரும் நிபந்தனைகள் வடிவில் சில முடிவுகளை எட்டுவதன் விளைவாக மட்டுமே, அத்தகைய சந்திப்பு சாத்தியம் என்று ரஷ்யா கருதுவதாக பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இராணுவச் சட்டத்தின் கீழ்
மட்டுமின்றி, பிரதிநிதிகள் குழுக்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய ஆவணங்களில் கையொப்பமிடும்போது, உக்ரேனிய தரப்பிலிருந்து இந்த ஆவணங்களில் யார் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடுவார்கள் என்பதுதான் எங்களுக்கு இருக்கும் முக்கிய மற்றும் அடிப்படையான கேள்வி என்றும் பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
பெஸ்கோவ் குறிப்பிட்டும் தகுதியான நபர் என்ற கருத்து தொடர்பில் அவர் விரிவான விளக்கமும் அளிக்கவில்லை. ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், புடின் முன்னர் ஜனாதிபதியாக ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மைக்கு சவால் விடுத்திருந்தார்.
ரஷ்யாவிற்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக இராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள உக்ரைன், புதிய தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |