ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (47) சிறையில் உயிரிழந்ததாக்க தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராகவும், ஆட்சியில் இருந்த ஊழலுக்கு எதிராகவும் போராடிய அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), வெள்ளிக்கிழமை நடைப்பயணத்தின் போது உடல்நலக்குறைவு அடைந்தார்.
அவர் சுயநினைவை இழந்ததால் அவருக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக ரஷ்ய சிறைச்சாலை சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நவல்னியின் மரணச் செய்தி ஜனாதிபதி புட்டினுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதையடுத்துசிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Leonid Volkov) தெரிவித்தார்.
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நவல்னியின் மரணம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நவல்னியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி கிரா யர்மேஷ் (), X தளத்தில், நவல்னியின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தவில்லை என்று கூறினார்.
நவல்னிக்கு ரஷ்ய அரசாங்கம் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. கடந்த டிசம்பரில், நவல்னி மத்திய ரஷ்யாவில் உள்ள சிறையில் இருந்து ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Alexei Navalny, Russian opposition leader, Arctic jail, Putin critic Alexei Navalny, Vladimir Putin, Russia