வீட்டுச்சிறையில் விளாடிமிர் புடினின் மகள்: நாடு திரும்பாமல் போகலாம் என அச்சம்
பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் மகள் அதிரடியாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகளான Maria Vorontsova தமது 37வது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ரஷ்யாவில் தற்போதையை அரசியல் சூழலை கருத்தில் கொண்டு Maria Vorontsova நாடு திரும்பாமலே போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து, விளாடிமிர் புடின் அதிரடி நடவடிக்கையாக தமது மகளை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் Maria Vorontsova தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவே இந்த நடவடிக்கை எனவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உண்மையில் Maria Vorontsova வெளிநாட்டில் இருந்து ரஷ்யா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, அவர் ஏன் தலைமறைவாக திட்டமிட்டார் என்பதற்கும் உரிய காரணம் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, மேற்கத்திய நாடுகளால் பொருளாதார தடைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் Maria Vorontsova. மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புடினின் மகள்கள் எவரும் கருத்துக் கூறவில்லை என்றே கூறப்படுகிறது.