நீண்டகால விளைவுகள்... இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துருக்கியும் ரஷ்யாவும்
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஆகியோர் கடுமையாக கண்டித்துள்ளனர்.
நீண்டகால விளைவுகள் ஏற்படும்
உடனடியாக இரு நாடுகளும் விரோதப் போக்கை நிறுத்துமாறு அவர்கள் தொலைபேசியில் பேசியபோது அழைப்பு விடுத்தனர். ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவது குறித்து இரு தரப்பினரும் மிகவும் கடுமையான கவலையை வெளிப்படுத்தினர்,
இது ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, இந்த மோதலால் முழு பிராந்தியத்திற்கும் கடுமையான நீண்டகால விளைவுகள் ஏற்படும் என்றும் இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
ஈரானிய அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு அரசியல் மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வு காணவும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும் தலைவர்கள் ஆதரவாகப் பேசினர். மட்டுமின்றி, இரு தரப்பினரும் நெருங்கிய ஒத்துழைப்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |