ஈரானுக்கு உதவி செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு புடின் அளித்த பதில்
ரஷ்ய ஜனாதிபதி புடினிடம், ஈரானுக்கு உதவி செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
புடின் அளித்த பதில்
ஈரான் இஸ்ரேலுக்கிடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், ஈரானுக்கு உதவி செய்யாதது ஏன் என புடினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த புடின், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பைச் சேர்ந்த கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
Putin: “Israel today is almost a Russian-speaking country, 2 million people from the Soviet Union and Russia live there. We take that into account.” pic.twitter.com/zC8VYa5AUm
— Open Source Intel (@Osint613) June 21, 2025
இஸ்ரேல் இன்று கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாக காணப்படுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, ரஷ்யாவின் சமகால வரலாற்றில் இதை நாங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினார்.
மேலும், ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள் என்றும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் மாஸ்கோ ஒரு பார்வையாளராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஈரானுடன் வலுவான பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ள அதே நேரத்தில், ரஷ்யா இஸ்ரேலுடன் நல்ல உறவை கடைப்பிடிக்கிறது.
ஆக, தங்களுக்கு இரு தரப்பின் உறவும் தேவை என்பதாலேயே ஈரானுக்கு உதவவில்லை என்னும் ரீதியில் நடுநிலையாக பதிலளித்துள்ளார் புடின்.
அத்துடன், கடந்த வாரம், இஸ்ரேல் ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய உதவ விரும்புவதாகவும் புடின் கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |