அதிகரிக்கும் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு: மூத்த ராணுவ ஜெனரலை பணி நீக்கம் செய்த புடின்
ரஷ்ய வீரர்களின் கடுமையான உயிரிழப்பை தொடர்ந்து கிழக்கு ராணுவ பிரிவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார்.
ஜெனரல் பதவி நீக்கம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளை வழி நடத்தும் மூத்த ஜெனரல்களில் ஒருவரை ரஷ்ய ஜனாதிபதி புடின் பதவி நீக்கம் செய்துள்ளார் என பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த புதுப்பித்தலின் படி, கர்னல் ஜெனரல் ருஸ்டம் முராடோவ்( Rustam Muradov) கிழக்குப் படைகளின் (EGF) தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
AP
ஜனாதிபதி புடினின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கிழக்கு படைகளின் மோசமான தாக்குதல் மற்றும் வுஹ்லேதார்(Vuhledar) நகரை கைப்பற்றுவதில் மீண்டும் மீண்டும் ரஷ்ய படைகள் சந்திக்கும் தோல்வியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
புடினின் நடவடிக்கை அதிகரிக்கலாம்
மூத்த ஜெனரலின் சொந்த துருப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, ரஷ்யா முழுவதும் தீவிரமான பொது விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
2023ல் மேற்கொள்ளப்பட்ட மூத்த ராணுவ அதிகாரியின் பணி நீக்கம் இது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
AP
அத்துடன் டான்பாஸில் ரஷ்யா தொடர்ந்து தனது நோக்கங்களை அடைய தவறினால் இன்னும் அதிகமான பணிநீக்கங்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 6 April 2023.
— Ministry of Defence ?? (@DefenceHQ) April 6, 2023
Find out more about Defence Intelligence's use of language: https://t.co/gX1G4bGxl4
?? #StandWithUkraine ?? pic.twitter.com/v19F58d2Xw