உக்ரைன் படை நடத்திய துல்லிய தாக்குதல்…வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: வீடியோ ஆதாரம்
ரஷ்ய படையின் “தாக்குதல் ஹெலிகாப்டர்” மீது உக்ரைனிய படைகள் நடத்திய புதிய தாக்குதலால் ஜனாதிபதி புடினுக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படைகளின் பின்னடைவு
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய போர் தாக்குதலில், ரஷ்ய படைகள் பெரும்பாலான கிழக்கு உக்ரைனிய பகுதிகளை கைப்பற்றி இருந்தது.
ஆனால் தற்போது இந்த போர் தாக்குதல் 9 மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் தீவிரமான எதிர்ப்பு தாக்குதலால் கெர்சன் உட்பட பல கிழக்கு பகுதிகளை ரஷ்யா இழந்துள்ளது.
Anti-aircraft guns of the Dnipro Missile Brigade shot down a Russian Ka-52 helicopter. pic.twitter.com/Sc7zjPs3Bq
— The New Voice of Ukraine (@NewVoiceUkraine) December 5, 2022
ரஷ்யாவின் ஒற்றை பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை இழந்தது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைனில் ரஷ்ய ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்ததால் விளாடிமிர் புடினுக்கு புதிய அடி ஏற்பட்டது.
வெடித்து சிதறிய ரஷ்ய ஹெலிகாப்டர்
போர் முனையின் கிழக்கு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய போர் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் மற்றொரு பேரழிவு அடியை அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) பேரழிவுகரமான தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன, உக்ரேனிய விமானப்படை 138 வது விமான எதிர்ப்பு படைப்பிரிவு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் மதியம் 2 மணியளவில் விமானத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
AFP via Getty Images
இந்த தாக்குதலில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது, வானத்தில் அடர்ந்த புகை மூட்டத்துடன், பின்னர் தரையை நோக்கி விழுந்து வெடித்தது.
உக்ரேனிய படைகளைத் தொடர்ந்து குறிவைக்கும் கா-52 உயரடுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர், புக் வான் பாதுகாப்பு அமைப்பால் தாக்கப்பட்டதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த புக் வான் பாதுகாப்பு அமைப்பு ஆரம்பத்தில் சோவியத் யூனியனால் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது.
AFP via Getty Images