புடின் ஆட்சியை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது! அவருக்கு ரத்த புற்றுநோய்? பரபரப்பு தகவல்
விளாடிமிர் புடின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரின் ஆட்சியை அகற்றுவதற்கான பணிகளும் நடப்பதாக உக்ரைன் நாட்டின் தளபதி கைர்யலோ புட்னவோ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் உடல்நிலை குறித்து அவ்வபோது பல்வேறு தகவல்கள் பரவும். தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீல் ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா மற்றும் பிறபகுதிகளில் இருந்து வரும் தகவல்படி புடின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையே புடின் தரப்புக்கு நெருக்கமான செல்வந்தர் ஒருவர், புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல், உக்ரைன் நாட்டின் தளபதி கைர்யலோ புட்னவோ தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், புடின் ஆட்சியை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
போரில் ரஷ்யா தோற்கும் பட்சத்தில், புதின் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது ஆட்சி தூக்கி வீசப்படும். ரஷ்யாவில் புதிய தலைமைக்கான சூழல் உருவாகும். இதற்கான வேலைகள் தற்போதே தொடங்கியுள்ளது. ஆட்சி மாற்றம் என்பதை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.